search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    12 ராசிக்கும் குருதோஷம் நீக்கும் பரிகாரம்
    X

    12 ராசிக்கும் குருதோஷம் நீக்கும் பரிகாரம்

    • பனிரெண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
    • மனித வாழ்வின் வெற்றிக்கு குரு பலம் மிக அவசியம்.

    மனித வாழ்வின் வெற்றிக்கு குரு பலம் மிக அவசியம். அதனால் தான் குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி என்ற பழமொழியை கூறினார்கள். குரு எந்த ஒரு ஜாதகதாரரையும் கெட்டு போக விடாது. அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது. இனி பனிரெண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு குரு 9, 12-ம் அதிபதி, பாக்கிய அதிபதி மற்றும் விரய அதிபதி. சுய ஜாதகத்தில் குருவும் பலம் பெற்றால் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். தந்தை வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தர்ம காரியங்கள் செய்து மகிழும் பாக்கியம் பெற்றவர்கள். தாயும், தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.தாய், தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள்.

    சுய ஜாதகத்தில் குரு பலம் குறைந்து பனிரெண்டாமிடமும் வலுத்தால் இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். இவர்களுடைய சொத்துக்கள் உறவுகளுக்கே பயன்படுகிறது. அல்லது குடும்ப சொத்துக்களை தந்தைக்காக அல்லது தந்தையால் இழக்க நேரும். அல்லது பாக்கியமும் தன யோகமும் குறைவுபடும். பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தாங்க முடியாத வைத்தியச் செலவும் இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு குரு 8, 11-ம் அதிபதி. அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதி. அஷ்டமாதிபதியாக குரு சுப வலுப்பெற்றால் சிலருக்கு அதிர்ஷ்ட பணம், லாட்டரி, உயில் சொத்து கிடைக்கும். அஷ்டமாதிபதியாக குரு அசுப வலுப்பெற்றால் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், தீராத கடன் ஏற்படும். பெண்களுக்கு கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாக்கும். சிலருக்கு கால தாமத திருமணத்தை தரலாம் அல்லது திருமணத்திற்குப் பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும்.

    லாப அதியாக குரு சுப வலுப்பெற்றால் எந்த தவறு செய்தாலும் தண்டணையிலிருந்து தப்பி விடுவார்கள். தொட்டது துலங்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பங்கு வர்த்தகம், அதிர்ஷ்ட வருமானம் இருக்கும். நயா பைசா பாக்கி இல்லாமல் எல்லா கடனையும் பைசல் செய்து நாணயத்தை காப்பாற்றுவார்கள்.மத்திம வயதில் குரு தசை புத்தி வந்தால் ரகசிய இரண்டாம் திருமணம் நடக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சுக்ர ஓரையில் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு குரு 7,10ம் அதிபதி. களத்திர ஸ்தானம், மற்றும் தொழில் ஸ்தானம் என்ற இரு கேந்திரங்களுக்கு அதிபதி என்பதால் கேந்திரா திபத்திய தோஷம் உண்டு. உபய லக்னம் என்பதால் பாதகா திபத்திய தோஷமும் ஏற்படும்.7ம் அதிபதியாகிய குரு சுப பலம் பெற்றால் வாழ்க்கைத் துணை யால் நண்பர்களால், தொழில் கூட்டாளியால், வாடிக்யா ளர்களால் சகாயமான பலன் உண்டு.

    10-ம் அதிபதியாக குரு பலம் பெற்றால் தொழில் மூலம் ஒரு உயர்வு உண்டு. வருமானம் அதிகமாக இருக்கும். அசுப பலம் பெற்ற குரு தசை புத்தி காலங்களில் மாரகம், பாதகம் மிகைப்படுத்தலாக இருக்கும். கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் விவாகரத்து பெறுவது, நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு உருவாகுவது போன்றவற்றால் நிம்மதி குறையும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை ஸ்ரீ ராமானுஜரை வழிபட நன்மைகள் நடக்கும்.

    கடகம்

    கடக ராசிக்கு குரு 6, 9-ம் அதிபதி. ருண ரோக சத்ரு ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதி.லக்னத்தில் குரு உச்சம் பெற்றாலும் தனுசில் ஆட்சி பெற்றாலும் கடன் கதவை தட்டும். குருவிற்கு சனி, கேது சம்பந்தம் இருந்தால் கடன் தீராது. தனித்த குருவாக இருந்தல் கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

    ஏதாவது ஒரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள். குருவிற்கு சனி,கேது சம்பந்தம் இருப்பவர்களின் கடன் ஜாதகரை உறுத் தெரியாமல் ஆக்கி விடும். குரு மற்றும் கேது தசை காலங்களில் மிகுந்த கவனம் தேவை. குருவே பாக்கிய அதிபதி என்பதால் முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு பிறவிக் கடனும், பொருள் கடனும் தொடர் கதையாக இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு குரு 5, 8-ம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. குருவும் 5,8-மிடமும் பலம் பெற்றால் பிள்ளைகளால் பெருமை, பாராட்டு உண்டு. மந்திர உபதேசம், குருவின் நல்லாசிகள் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானம் உண்டு. குருவும் 5,8மிடம் பலம் குறைந்தால் கற்ற வித்தை பலன் தராது.பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு, கடன் தொல்லை தாங்க முடியாமல் தாலியை கழட்டி வீசுகிறார்கள் அல்லது தாலியை அடமானம் வைக்கிறார்கள்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு குரு 4,7-ம் அதிபதி. சுக ஸ்தானம், களத்திர ஸ்தான அதிபதி. பாதகாதிபதி, மாரகா திபதி. சுய ஜாதகத்தில் குருவும் 4,7-மிடமும் பலம் பெறும்போது அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்து இருக்கும். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும்.

    கணவன் மனைவிக்குள் அன்யோன்யமும், நல்லுறவும் நிறைந்தி ருக்கும். குருவும் 4,7-மிடமும் அசுப வலுப்பெற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கையைத் தருகிறது. திருமண வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவது இல்லை. பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வரும் கிரகங்கள் தசாபுத்தி காலங்களில் எதிர்பாராத தண்டனையைக் கொடுத்து விடும். உபயம லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவீரத்தை உணரும் முன்பு தண்டனையே கிடைத்துவிடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை புதன் ஓரையில் சக்ரத்தாழ்வாரை வழிபட வேண்டும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு குரு 3,6-ம் அதிபதி. சகாய ஸ்தானம் மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி.

    சுய ஜாதகத்தில் 3ம்மிடமும் குருவும் பலம் பெற்றால் ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். அதே போல் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் பணி புரிபவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். 6-ம்மிடமும் குருவும் பலம் பெற்றால் அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும் போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது. அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்யும் துலா லக்னத்தினர் தொழிலால் கடனாளி யாகிறார்கள். உடன் பிறந்த இளைய சகோதரத்தால் தாய்மாமாவால் வஞ்சிக்கப்படுகி றார்கள். சிலர் ஜாமீன் பிரச்சினையில் மாட்டுகிறார்கள்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்கு குரு 2, 5-ம் அதிபதி தனா திபதி, பஞ்சமாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால். மாபெரும் புண்ணியம். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே இணையப் பெற்றவர்கள். குல தெய்வ அனுகிரகம் உண்டு. பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்க ளால் பிள்ளைகளுக்கும் பயன் உண்டு.

    உயர் கல்வி யோகம் உண்டு. வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை,ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்ப வர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.குரு பலம் குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்டம் குறைவுபடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை நவகிரக குருபகவானை வழிபட வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு குரு 1, 4-ம் அதிபதி. லக்னா அதிபதி, கேந்திராதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் நிச்சயம் வீடு மனை யோகம் சித்திக்கும். நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். பொன்னும் பொரு ளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்து இருக்கும். இவர்கள் பண்ணை யாளர்களாக, விவசாயிகளாக இருப்பார்கள். தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்து வார்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த வர்களாக இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு.

    குரு பலம் குறைந்தால் சொத்துக்களால் பயன் இருக்காது. பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உடல் நல பாதிப்பு இருக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் அனுசரனை இருக்காது. தாய் அடிக்கடி நோய் வாய்ப்படுவார். குரு கேந்திராதிபதி என்பதால் தசை புத்தி காலங்களில் தாய்வழி உறவுகளுடன் தேவையற்ற மனக் கசப்பு உண்டாகும். சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை குரு ஓரையில் பஞ்சமுக கணப தியை வழிபட வேண்டும்.

    மகரம்

    மகர ராசிக்கு குரு 3,12-ம் அதிபதி. சகாய ஸ்தான அதிபதி விரய அதிபதி. மூன்றாம் அதிபதியாகி குரு பலம் பெறும் போது லட்சியங்கள் நிறைந்தவர்கள். திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள். உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். 12ம்மிடம் வலுப்பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். செவித் திறன் குறையும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கும். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஏமாற்றத்தை சந்திபார்கள். வேலையாட்களால் இழப்பு இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு 2,11-ம் அதிபதி. குரு தன, லாப அதிபதி. இவர்களுக்கு குரு அதிகப்படியான யோகத்தை வழங்குவார். சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் செல்வாக்கு, சொல்வாக்கு நிறைந்தவர்கள். தனது வாக்கு திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்று வதில் வல்லவர். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்.

    ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு. வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. குரு பலம் குறைந்தால் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை குறையும். புகழ், அந்தஸ்து, கவுரவம் மட்டுபடும். தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் தவறிப் போகும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வு உண்டு.

    மீனம்

    மீன ராசிக்கு குரு 1, 10-ம் அதிபதி. லக்னாதிபதி, பத்தாம் அதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள் இவர்கள் ஆசிரியராகவோ, காலேஜ் புரபசராகவோ, அல்லது யாரேனும் ஒருவருக்கு ஆலோசனை வழங்கு பவராகவோ இருப்பார்கள். நிலையான நிரந்தரமான தொழில், அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும்.

    குரு பலம் குறைந்தால் லக்னாதிபதி என்பதால் எளிதில் கண் திருஷ்டி தோஷம், அவமானம் போன்றவை தொடர்கதையாக இருக்கும். குரு கேந்திராதிபதி என்பதால் வருமான வரி துறையிடம் சிக்குவது, கொடுக்கல் வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்ற அசவுகரியங்கள் உண்டாகும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை குபேர லட்சு பூஜை செய்ய வேண்டும். ஒரு ஜாதகத்தின் பலமே குரு பலம் தான். எனவே குரு பலத்தை அதிகரிக்க உரிய பரிகாரத்தை பயன்படுத்தி பயன் பெற நல் வாழ்த்துக்கள்.

    பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×