search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வாள்வீச்சு போட்டி- 6 தமிழக வீராங்கனைகள் பங்கேற்பு
    X

    வாள்வீச்சு போட்டி- 6 தமிழக வீராங்கனைகள் பங்கேற்பு

    • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
    • வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய வாள்வீச்சு சம்மேளனம் சார்பில் முதலாவது எப்.ஐ.இ. பாயில் பிரிவு பெண்களுக்கான சர்வதேச சேட்லைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்தப்போட்டி இன்றும், நாளையும் 2 நாட்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    பெண்களுக்கான பாயில் பிரிவு வாள்வீச்சு போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 58 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த சர்வதேச போட்டி இந்தியாவில் வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

    சர்வதேச சேட்லைட் பாயில் பிரிவு வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் பெயர் விவரம்:-

    விபுஷா, ஜாய்ஸ் அஷிதா, சுவர்ணபிரபா, திவ்ய தர்ஷினி (4 பேரும் சென்னை) ஜெனிஷா (கன்னியாகுமரி), கனக லட்சுமி (சேலம்).

    இந்திய அணிக்கு 6 தமிழக வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், கன்வீனர் வி.கருணா மூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×