search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 9-வது சுற்றில் டிரா- 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை
    X

    செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 9-வது சுற்றில் டிரா- 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை

    • முதல் 8 சுற்றுகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 9-வது சுற்றை டிரா செய்தது.
    • 17 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றன.

    ஓபன் பிரிவில் நேற்று நடந்த 9-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை எதிர் கொண்டது. இந்த போட்டி 2-2 என்ற புள்ளி கணக்கில் டிரா ஆனது. இதுவரை நடந்த 8 சுற்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. தற்போதுதான் முதல் முறையாக வெற்றி பெற முடியாமல் டிரா செய்துள்ளது.

    இந்திய வீரர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் டிரா செய்தனர். 9-வது சுற்று முடிவில் இந்தியா 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    10-வது சுற்றில் அமெரிக்காவுடன் மோதுகிறது. அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், சீனா ஆகியவை தலா 15 புள்ளிகளுடன் உள்ளன.

    பெண்கள் பிரிவில் இந்திய அணி 9-வது சுற்றில் அமெரிக்காவை சந்தித்தது. இந்த போட்டி 2-2 என்ற கணக்கில் என்ற கணக்கில் டிரா ஆனது. 9-வது சுற்று முடிவில் 15 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 10-வது சுற்றில் சீனாவுடன் மோதுகிறது. கஜகஸ்தான் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    Next Story
    ×