search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபி: அவசரமாக நாடு திரும்பிய இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர்
    X

    சாம்பியன்ஸ் டிராபி: அவசரமாக நாடு திரும்பிய இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர்

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய வீரர் கள் துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இருக்கிறார். இந்த நிலையில் மோர்னே மோர்கலின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.

    இதை தொடர்ந்து மோர்கல் உடனடியாக துபாயில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பினார். அவர் மீண்டும் எப்போது அணியுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இந்தப் போட்டி தொடரில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார். தற்போது மார்னே மார்கலும் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×