search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டேபிள் டென்னிஸ்
    X

    டேபிள் டென்னிஸ்: இந்திய பெண்கள் அணி காலிறுதியில் தோல்வி

    • முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.
    • 2-வது மேட்சில் மணிகா பத்ரா 1-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது.

    முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி ஜெர்மனியின் ஜியாவோனா ஷான்- யுயன் வான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.

    2-வது மேட்சில் மணிகா பத்ரா- ஜெர்மனியின் அன்னெத் கவ்மான் மோதினார்கள். இதில் மணிகா பத்ரா 1-3 எனத் தோல்வியடைந்தார்.

    3-வது மேட்சில் அர்ச்சனா கிரிஷ் கமத்- ஜியாவோனா ஜோடி விளையாடியது. இதில் அர்ச்சனா 3-1 என வெற்றி பெற்றார்.

    4-வது போட்டியில் ஸ்ரீஜா அகுலா- அன்னெட் கவ்மான் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்ரீஜா 0-3 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்து வெளியேறியது.

    தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்ர் தடை ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி ஏமாற்றம் அடைந்தார்.

    Next Story
    ×