search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிங்கப்பூர் ஓபன்: 2-வது சுற்றில் கடும் சவாலை எதிர்கொள்ளும் பிவி சிந்து
    X

    சிங்கப்பூர் ஓபன்: 2-வது சுற்றில் கடும் சவாலை எதிர்கொள்ளும் பிவி சிந்து

    • பிவி சிந்து முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனையை 21-12, 22-20 என வீழ்த்தினார்.
    • 2-வது சுற்றில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-12, 22-20 என நேர் கேமில் டென்மார்க் வீராங்கனை லின் ஜோஜ்மார்க்கை வீழ்த்தினார்.

    2-வது சுற்றில் பிவி சிந்துவுக்கு கடும் சவால் நிறைந்துள்ளது. தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரினை எதிர்கொள்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் இவரிடம் தோல்வியடைந்துதான் தங்கம் பதக்கத்தை தவறிவிட்டார். கரோலினா மரினுக்கு எதிராக பிவி சிந்துவின் சாதனை 5-11 என்ற அளவில்தான் உள்ளது.

    கடைசியாக இருவரும் டென்மார்க் ஓபனில் மோதிக் கொண்டனர். அப்போது கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டதால் இருவருக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. பிவி சிந்து கடந்த வாரம் நடைபெற்ற தாய்லாந்து ஓபனில் 2-வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×