search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக்கில் என் மீது அதிக அழுத்தம் இருக்கிறது- நீரஜ் சோப்ரா
    X

    பாரீஸ் ஒலிம்பிக்கில் என் மீது அதிக அழுத்தம் இருக்கிறது- நீரஜ் சோப்ரா

    • 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன்.
    • கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறியும் வீரரான அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு அவர் இந்த சாதனையை படைத்தார். மேலும் அவர் உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா மீது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தன் மீது அழுத்தம் அதிகம் இருப்பதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த முறை என் மீது அழுத்தம் அதிகம் உள்ளது. ஏனென்றால் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை நான் தக்கவைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இதற்கு முன்பு இதே மாதிரியான அனுபவத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் எதிர்கொண்டேன்.

    2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன். அதனால் நான் ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.

    ஆனாலும் அதோடு ஒலிம்பிக்கை ஒப்பிட முடியாது. என் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை மறுக்க இயலாது. கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.

    இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

    Next Story
    ×