search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    para Olympics
    X

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கிற்கு 'பாரா' ஒலிம்பிக் என ஏன் பெயர் வந்தது?

    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
    • ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

    பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'பாரா ஒலிம்பிக்' என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

    பாரா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் அருகில் அல்லது அடுத்தது என்று பொருள் ஆகும். ஒலிம்பி போட்டிகளுக்கு அடுத்ததாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் இதனை பாரா ஒலிம்பிக் என்று அழைக்கின்றனர்.

    ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×