search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பும்ரா பற்றி எங்களுக்கு கவலை இல்லை- பாகிஸ்தான் பயிற்சியாளர் சொல்கிறார்
    X

    பும்ரா பற்றி எங்களுக்கு கவலை இல்லை- பாகிஸ்தான் பயிற்சியாளர் சொல்கிறார்

    • சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 8 சிறந்த அணிகள் விளையாடுகின்றன.
    • சமீப காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவுகோலாக மாறி விட்டது.

    8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 23-ந்தேதி துபாயில் நடக்கிறது. இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 8 சிறந்த அணிகள் விளையாடுகின்றன. இதில் எந்த அணியையும் நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த அணியிலும் பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் இருந்தால், அது அந்த அணிக்கு பலமாக இருக்கும். ஆனால் நாங்கள் அவரைச் சுற்றி எல்லாவற்றையும் திட்டமிடமாட்டோம். பும்ராவின் உடற்தகுதி குறித்து அவர்கள் (இந்தியா) கவலைப்பட வேண்டும். பும்ரா பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    சமீப காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவுகோலாக மாறி விட்டது. எனவே ஒருநாள் போட்டிகளில் 325 அல்லது 350 ரன்கள் கூட சாத்தியமாகும்.

    குறிப்பாக பீல்டிங் கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதால் அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×