என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்.
- தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடங்கின. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் மைதிலி ராஜேந்திரன்; காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சிறு தொழில்கள் கழக மேலாண்மை இயக்குனர் மதுமதி; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்;
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி; அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நில சீர்திருத்த ஆணையர் வெங்கடாசலம்; தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு வேளாண்மை ஆணையர் சுப்பிரணியன்;
கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலேண்மை இயக்குனர் சங்கர்; திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ்;
மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் சுந்தரவல்லி; தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேரையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் 1½ மணி நேரம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அழைத்து ஆய்வு செய்வது, அதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவது, இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு 3 முறை பயணிப்பது ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை சத்யபிரதா சாகு வழங்கினார்.






