search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    mahavishnu
    X

    மகாவிஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

    • மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்நிலையில், மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இதனையடுத்து, மகாவிஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×