search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    75 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற பேரன்
    X

    75 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற பேரன்

    • 75 வயதான பாட்டியை பேரனே கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம், காளி கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரங்ககவுண்டர். இவரது மனைவி வள்ளியம்மா (75), இவர்களுக்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

    வள்ளியம்மாளின் கணவர் இறந்துவிட்ட நிலையில், வள்ளியம்மாள் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார், விவசாய கூலி வேலை செய்து வந்த வள்ளியம்மாள் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு படுக்க சென்று நிலையில் சுமார் 8 மணி அளவில் அவர் வீட்டு முன் அறையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து எடப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வள்ளியம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை நடந்த நேரத்தில் வள்ளியம்மாளின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்ட வள்ளியம்மாளின் மகள் சின்னப்பொண்ணுவின் மகன் விக்னேஷ் (22) குடிபோதையில் வள்ளியம்மாளின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து விக்னேஷை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணையில் மது போதையில் இருந்த விக்னேஷ் தனது பாட்டி வள்ளியம்மாள் வீட்டிற்கு சென்றதும், அங்கு அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்த நிலையில், அவர் சத்தம் போடவே அவரை தாக்கியதால் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இதனை அடுத்து அவரை கைது செய்த எடப்பாடி போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    75 வயதான பாட்டியை பேரனே கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×