search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கியபோது விபத்து- உடல் நசுங்கி ஒருவர் பலி
    X

    கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கியபோது விபத்து- உடல் நசுங்கி ஒருவர் பலி

    • 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் பெட்டி விழுந்து விபத்துக்குள்ளானது.

    அதிக எடை கொண்ட கன்டெய்னர் விழுந்ததில், கீழே வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கியபோது கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×