search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சவுக்கு சங்கர்
    X

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து- நீதிமன்றம் அதிரடி

    • சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து மனு.
    • சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 14ம் தேதி அன்று சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆர்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம், ஆகியோர் கொண்ட டிவிஷன் பென்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.

    அப்போது, யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

    விசாரணையின்போது, சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

    ஆனால், சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதை தடுக்கவே குண்டர் சட்டத்தில் அடைத்ததாக காவல்துறை வாதம் செய்தது.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து, வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×