search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டம்- அரசாணை வெளியீடு
    X

    அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டம்- அரசாணை வெளியீடு

    • ஒரு சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் நான்கு உரிமையாளர்கள் இருக்க வேண்டும்.
    • பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டம் விதிகளை வகுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அடுக்குமாடி குடியிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய் வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம் ஒன்றை நிறுவி, அதை பதிவு செய்ய வேண்டும்.

    ஒரு சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் நான்கு உரிமையாளர்கள் இருக்க வேண்டும்.

    பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும்.

    ஒரு சொத்தில் பல குடியிருப்புகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கலாம்.

    ஒவ்வொரு சங்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

    கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக திட்டமிடல் அதிகாரிகள் சான்றளித்தால், விரிவான மறுவடிவமைப்பு அறிக்கையைத் தயாரிக்க சங்கங்கள் அனுமதிக்கப்படும்.

    மறுவடிவமைப்பு திட்டம் முடிந்ததும், கட்டடத்தை காலி செய்யுமாறு உரிமைாயளர்களுக்கு சங்கம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×