search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Armstrong
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 10 பேர் மீது குண்டாஸ்

    • படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு உள்ளிட்ட பத்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    Next Story
    ×