search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டிற்குள் புகுந்து குக்கரை திறந்து உணவு சாப்பிட்ட கரடி
    X

    வீட்டிற்குள் புகுந்து குக்கரை திறந்து உணவு சாப்பிட்ட கரடி

    • கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.
    • கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த பென்காம் எஸ்ட்டேட் அடர்ந்த வனப்பகுதி அருகே அமைந்து உள்ளது.

    இதனால் அவ்வப்போது இந்த பகுதியில் வனவிலங்குகள் உலா வருகின்றன. மேலும் அவை அங்கு வசிக்கும் பலரையும் தாக்கி விட்டு தப்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கடந்த 6 மாதங்களாக பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கரடிகள் தினமும் பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    அந்த நேரத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விடுவதால், கரடிகள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் உள்ள குக்கரை திறந்து சாதத்தையும் சாப்பிடுகின்றன.

    மேலும் கடைகளை உடைத்து அங்குள்ள எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை தின்றுவிட்டு சென்று விடுகின்றன. அதிலும் குறிப்பாக ஒருசில கரடிகள் இரவு நேரங்களிலும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன.


    இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தூக்கத்தை தொலைத்து இரவும் பகலுமாக தவியாய் தவித்து வருகின்றனர்.

    இரவும் பகலும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது.

    பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அவ்வப்போது தீப்பந்தங்கள் காட்டி விரட்டினாலும், கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.

    எனவே பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×