என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடக்கம்: விவசாயிகள்-பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேறியதன் மூலம் எங்களின் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறியுள்ளது.
- விடுபட்ட குளம், குட்டைகளையும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
அவினாசி:
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விவசாயிகள், பொதுமக்கள், போராட்டக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேறியதன் மூலம் எங்களின் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறியுள்ளது. இதற்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தி உள்ளோம். தற்போது அந்த திட்டம் நிறைவேற்ற ப்பட்டுள்ளதன் மூலம் ஏதோ 2-வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றது போல் உள்ளது. இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இந்த திட்டம் நிறைவேற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளித்தனர். இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் விடுபட்ட குளம், குட்டைகளையும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்