search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாகனங்களில் படங்கள் ஒட்ட தடை? தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
    X

    வாகனங்களில் படங்கள் ஒட்ட தடை? தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

    • சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
    • அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை.

    வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    அந்த மனுவில் வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும்.

    பேருந்துகளின் பின்புறம் மற்றம் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×