search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    20 மாடி கட்டிடத்தில் கிரில்களுக்கு இடையே சிக்கிய பூனை மீட்பு- வீடியோ வைரல்
    X

    20 மாடி கட்டிடத்தில் கிரில்களுக்கு இடையே சிக்கிய பூனை மீட்பு- வீடியோ வைரல்

    • புளு கிராஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சூழ்நிலைகளை ஆராய்ந்தனர்.
    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் பூனையை காப்பாற்றிய மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    வட சென்னையில் 20 மாடி உயரம் கொண்ட ஒரு கட்டிடத்தின் ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையே பூனை சிக்கி கொண்டதும், அதனை பத்திரமாக மீட்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக சென்னையில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் ஆப் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளது. உயரமான கட்டிடத்தின் கிரில் கம்பிகளுக்கு இடையே பூனை மாட்டிக்கொண்டதை பார்த்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு துறை மற்றும் புளு கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு சென்ற புளு கிராஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சூழ்நிலைகளை ஆராய்ந்தனர்.

    அப்போது அந்த கட்டிடத்திற்கு மாடி வழியாக மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில், பூனை சிக்கி இருந்த இடத்திற்கு ஒரு கயிறை போட்டு அந்த குழுவினர் போராடி அந்த பூனையை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் பூனையை காப்பாற்றிய மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர். இது மிகவும் கடினமான மீட்பு பணி, பூனை சிக்கி இருக்கும் உயரத்தையும், அந்த மங்கலான இடத்தையும் கற்பனை செய்து பாருங்கள். பூனையை மீட்க போராடியவர்களுக்கு மிக்க நன்றி என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×