search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    GCC Meet
    X

    சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயர்வு - தீர்மானம் நிறைவேற்றம்

    • 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர அம்மா உணவகத்தில் பழுதான இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாத்திரங்களை மாற்ற ரூ. 7.6 கோடி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிபட்டால் அதன் உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், ஏற்கனவே ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்த அபராத தொகையை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.

    முதல்முறை மாடு பிடிபட்டால் ரூ. 10 ஆயிரமும், 2 ஆவது முறை பிடிபட்டால் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×