search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழக கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை.. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    தமிழக கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை.. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது.
    • மூன்று வாரங்களில் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தமிழகம் முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ. 8 கோடியே 55 லட்சம் தொகையை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மாநிலம் முழுக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள சானிடரி நாப்கின் எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது.

    இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசு ரூ. 8 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×