search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    • மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.

    சென்னை:

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதியது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தகவல் கிடைக்கப் பெற்றவுடன், அமைச்சர் நாசர் அவர்களையும் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கென தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.

    விபத்துக்கு உள்ளான ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×