என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கார் வெடித்தபோது பயங்கர சத்தம் கேட்டது- என்.ஐ.ஏ.விடம் கோவில் பூசாரி தகவல்
- சம்பவம் நடந்த இடம், அருகே உள்ள கோவில், கோவிலின் எதிர்ப்புற வீதியில் உள்ள அர்ச்சகர் தங்கி இருக்கும் வீடு உள்ளிட்டவற்றின் தூர இடைவெளியையும் அளவெடுத்து அந்த இடத்தை வரைபடமாக தயார் செய்து எடுத்து சென்றனர்.
- என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
கோவை:
கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். விசாரணையில் முபின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ. போலீசார் நேற்று தங்களது விசாரணையை தொடங்கினர். என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில், விசாரணை அதிகாரி விக்னேஷ்வரன் அடங்கிய 8 பேர் குழுவினர் சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கார் வெடிப்பு நடந்த இடம், கார் இருந்த நிலை, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட கோவிலின் முன்புறம் உள்ளிட்ட இடங்கள், காரின் உதிரி பாகங்கள், சிலிண்டர்கள் கிடந்த இடம், முபின் உயிரிழந்து கிடந்த இடம், கோவில் வளாகம், சுற்றுப்புற பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் கோவில் பூசாரி சுந்தரேசனிடமும் விசாரணை நடத்தினர். அவரிடம் என்.ஐ. அதிகாரிகள், எத்தனை மணிக்கு சத்தம் கேட்டது. நீங்கள் எப்போது வந்து பார்த்தீர்கள்.
அப்போது சம்பவ இடத்தில் என்ன மாதிரியான சூழல் இருந்தது என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு பூசாரி, கோவில் எதிர்புறத்தில் எனது வீடு உள்ளது.
சம்பவம் நடந்த அன்று அதிகாலையில் நான் தூக்கத்தில் இருந்த போது பெரும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக வெளியில் வந்து பார்த்தேன். அப்போது தான் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து எரிந்து கொண்டிருந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்தார்.
அதனை போலீசார் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து கொண்டனர். பூசாரியிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 40 நிமிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் கோவிலுக்குள் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவில் ஊழியர்களிடம், வழக்கமாக கோவில் எத்தனை மணிக்கு திறக்கப்படும். தினமும் வந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும் கேட்டறிந்தனர். கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர்.
சம்பவத்தின்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பாண்டியராஜன், ஏட்டு தேவக்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவம் நடந்த இடம், அருகே உள்ள கோவில், கோவிலின் எதிர்ப்புற வீதியில் உள்ள அர்ச்சகர் தங்கி இருக்கும் வீடு உள்ளிட்டவற்றின் தூர இடைவெளியையும் அளவெடுத்து அந்த இடத்தை வரைபடமாக தயார் செய்து எடுத்து சென்றனர்.
என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து கோவையிலேயே முகாமிட்டு இந்த வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்