search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை
    X

    பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை

    • பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 106 ஆண்டுகள் கடந்த நிலையில் பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி ரூ.535 கோடி மதிப்பிட்டடில் இரட்டை வழித்தடத்தில் புதிய ரெயில் பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது. கப்பல்கள் வந்து செல்லும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன் மையப்பகுதியில் கப்பல்களுக்கு விழிவிடும் வகையில் உயர் மின் அழுத்தம் கொண்ட மோட்டர்கள் மூலம் மேல் நோக்கி தூக்கும் வகையில் மையப்பகுதி அமைக்கப்படுகிறது.

    பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்றொரு பகுதியில் இருந்து மையப்பகுதியில் பொறுத்தப்படும் பாலம் வடிவமைக்கப்பட்டு தற்போது மையப்பகுதி அருகே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மையப்பகுதியில் பொறுத்தப்படும் தூக்கு பாலம் பொறுத்துவதற்கு வசதியாக கடலில் ராட்சத இரும்பு மிதவையில் கிரேன் பொருத்தி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் காரணமாக தூக்குப்பாலம் கால்வாயில் கப்பல்கள் பெரிய படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதி துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் புதிய தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் வரை கால்வாய் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது என ரெயில் விகாஸ்நிகம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×