search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு- தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு- தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதி மாறன் எம்.பி. தலைமை தாங்கினார்.
    • தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே? வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ ரெயில் நிதி ஒதுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மத்திய அரசின் செயலை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தை நடத்தினர். அனைத்து மாவட்ட செயலாளர்களும் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் தி.மு.க.வின் பிற அணி நிர்வாகிகள் தீவிரமாக கலந்து கொண்டு மத்திய அரசின் போக்கை கண்டித்து கோஷமிட்டனர்.

    சென்னையில் கலெக்டர் அலுவலகம், சைதாப்பேட்டை சின்னமலை, தாம்பரம், ஆவடி ஆகிய 4 இடங்களில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதி மாறன் எம்.பி. தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி. எம்.எல்.ஏக்கள், ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், மண்டல தலைவர் நேதாஜி, கணேசன், இலக்கிய அணி செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க பாரபட்சம் காட்டாதே, ஒன்றிய அரசே தமிழ்நாட்டை புறக்கணிக்காதே! தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே? வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ ரெயில் நிதி ஒதுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சைதாப்பேட்டை சின்னமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமை தாங்கினார். இதில் தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள், மயிலை த.வேலு, எழிலரசன், காரப்பாக்கம் கணபதி மற்றும் பூச்சி முருகன், அன்பகம் கலை, காசிமுத்து மாணிக்கம், தனசேகரன், கண்ணன், தி.நகர் பி.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தலைமை தீர்மான குழு செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம், மாவட்ட ஒன்றிய குழு தலைவர் படப்பை மனோகரன், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ஏ.கே.கருணாகரன், செம்பாக்கம் இரா.சுரேஷ், இ.எஸ்.பெர்னாட், கவுன்சிலர்கள் பெருங்களத்தூர் சேகர், சிட்லபாக்கம் சுரேஷ், ஜோதி குமார், புகழேந்தி, நரேஷ் கண்ணா, பெரியநாயகம், நிர்வாகிகள் ரஞ்சன், இரா.செல்வகுமார், எஸ்.ஜி.கருணாகரன், வேல்மணி பி.ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஆவடி மாநகராட்சி அருகில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., ஆவடி மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் சண் பிரகாஷ் உள்பட ஏராள மானவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×