search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மது விலக்கிற்கு எப்போதும் ஆதரவானது திமுக அரசு- அமைச்சர் ரகுபதி
    X

    மது விலக்கிற்கு எப்போதும் ஆதரவானது திமுக அரசு- அமைச்சர் ரகுபதி

    • ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
    • ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.

    தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவை துண்டிப்பதாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது.

    ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.

    காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. திமுக அரசு மது விலக்கிற்கு எப்போதும் ஆதரவான அரசு.

    மதுவை ஒழிப்பது மத்திய அரசின் கையில் தான் உள்ளது. மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்து விட முடியாது.

    மது விலக்கு தொடர்பாக ஒட்டுமொத்த தேசத்திற்குமான கொள்கையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×