search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பத்து மாவட்டங்களுக்கு அலர்ட்.. மூன்று மணி நேரத்திற்கு மழை.. வானிலை ஆய்வு மையம்
    X

    பத்து மாவட்டங்களுக்கு அலர்ட்.. மூன்று மணி நேரத்திற்கு மழை.. வானிலை ஆய்வு மையம்

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    இன்று அதிகாலை தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை உள்பட பத்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பத்து மாட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×