search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆபத்தான முறையில் வளர்ப்பு நாய்கள் சுற்றித்திரிந்தால் 1913 எண்ணில் புகார் செய்யலாம்- ராதாகிருஷ்ணன்
    X

    ஆபத்தான முறையில் வளர்ப்பு நாய்கள் சுற்றித்திரிந்தால் 1913 எண்ணில் புகார் செய்யலாம்- ராதாகிருஷ்ணன்

    • கழுத்தில் சங்கிலியால் கட்டி அதனை உரிமையாளர் கையில் பிடித்திருக்க வேண்டும்.
    • பாதுகாப்பு விதிகளை மீறி நாய்களை யாராவது தெருக்களில் திரியவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராட்வைலர் நாய்களை போன்று 23 வகையான வெளிநாட்டு நாய்களை இந்தியாவில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோர்ட்டு மூலமாக விலங்குகள் நல ஆர்வலர்கள் அதற்கு தடை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்கிற விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    ராட்வைலர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி அதனை முழுமையாக மீறியுள்ளார். இதையடுத்து அவரது 2 நாய்களையும் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2 நாய்களும் மரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது, கழுத்தில் சங்கிலியால் கட்டி அதனை உரிமையாளர் கையில் பிடித்திருக்க வேண்டும். வாய் மூடியிருக்கும் வகையில் 'மசூல்' என்று அழைக்கப்படும் கவசத்தையும் கண்டிப்பாக நாயின் முகத்தில் அணிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு விதிகளை மீறி நாய்களை யாராவது தெருக்களில் திரியவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இது தொடர்பாக பொது மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×