search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    25 எம்.பிக்கள் கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகமும் இடம்பெற்றிருக்கும்- அன்புமணி
    X

    25 எம்.பிக்கள் கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகமும் இடம்பெற்றிருக்கும்- அன்புமணி

    • ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதி.
    • துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் குறித்து விரைவில் தகவல் சொல்கிறேன் என்றார்.

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    இந்த நிலையில் மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் மாநிலத் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,"மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் எங்களுக்கு 25 எம்.பிக்கள் வென்று கொடுத்திருக்க வேண்டும்" என்றார்.

    பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறாமல் இருந்ததற்கு இதுதான் காரணமா ? என கேட்டதற்கு காரணம் என இல்லை, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் எனக் கூறிய அன்புமணி சமாளித்துக் கொண்டார்.

    மேலும் பேசிய அவர், " இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவாக சொல்கிறேன். தகவல் சேகரித்து கொண்டு இருக்கிறோம். துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் குறித்து தகவல் சொல்கிறேன்" என்றார்.

    Next Story
    ×