search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமத்துவ சமூகம் உருவாக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றுவோம்- அண்ணாமலை
    X

    சமத்துவ சமூகம் உருவாக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றுவோம்- அண்ணாமலை

    • சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்தவர் ஐயா இமானுவேல் சேகரன்.
    • ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ தள பதிவில் கூறியிருப்பதாவது:

    சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்கள் நினைவு தினம் இன்று.

    ஒடுக்கப்பட்ட மக்கள், அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ சமூகம் உருவாகவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம்.

    அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டு, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×