search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவாரூர் ரவுண்டானாவில் கருணாநிதி சிலை அமைக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
    X

    திருவாரூர் ரவுண்டானாவில் கருணாநிதி சிலை அமைக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    • ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.
    • கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானாவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை நிறுவ அரசு முன்வருமா? என்று பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியாதவது:-

    திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானா நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் பெற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அதேபோல். பொது இடத்திலோ சாலைகளிலோ சாலை ஓரத்திலோ சிலை வைப்பதற்கு தடை உள்ள காரணத்தினால் தான் உடனடியாக அனுமதி வழங்கப்பட முடியவில்லை. அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.

    Next Story
    ×