search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் ஈபிஎஸ்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
    X

    இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் ஈபிஎஸ்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
    • 2 நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருவெண்ணெய்நல்லூரில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் அவசரகதியில் வழக்கம்போல ஓர் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

    உயிரிழந்த ஜெயராமன் அதிகளவு மதுப்பழக்கம் உள்ளவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இச்சம்பவத்தை கள்ளச்சாராய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் ஈபிஎஸ்.

    ஜெயராமன் உடல்நலம் சரியில்லாமல் 2 நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×