search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கள்ளச்சாராயம் உயிரிழப்பு- 54ஆக உயர்வு
    X

    கள்ளச்சாராயம் உயிரிழப்பு- 54ஆக உயர்வு

    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
    • தற்போது மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர் மருத்துவ குழுவினர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாண சுந்தரம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர் மருத்துவ குழுவினர். ஏனென்றால் ஏற்கனவே ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரில் 8 பேர் மிகவும் கவலை கிடமான இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    கள்ளச்சாரயம் குடித்ததில் கண்பார்வை இழந்தவர்கள் 8 உள்ளன. பார்வை இழந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×