search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் ஓட்டலில் இட்லிக்கு வாங்கிய பார்சல் சாம்பாரில் இறந்து கிடந்த பல்லி
    X

    தனியார் ஓட்டலில் இட்லிக்கு வாங்கிய பார்சல் சாம்பாரில் இறந்து கிடந்த பல்லி

    • நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
    • உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிக்கு வருகை தரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு அவரது உறவினர் வாங்கிச் சென்ற இட்லி பார்சல் வாங்கி சென்றனார். பின்னர் அவர் மருத்துவமனைக்குள் சென்று நோயாளிக்கு கொடுப்பதற்காக பார்சலை பிரித்து பிளாஸ்டிக் கவரில் இருந்த சாம்பாரை ஊற்றினார்.

    அப்போது அந்த சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாப்பிடவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் நோயாளியின் உறவினர் ஓட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி கிடந்ததாக சிவகங்கை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக அந்த ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்து செய்தனர். அப்போது அங்கு இருப்பு வைத்திருந்த காலாவதியான பூரி, புரோட்டா, கோழிக்கறி, சமையல் மசாலா பொருட்கள், அழுகிப்போன காய்கறிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரசு மருத்துவமனைக்கு எதிரிலேயே சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவகத்தின் சமையலறையை ஐந்து நாட்களில் சுத்தப்படுத்தி சரி செய்யவும், அதுவரை உணவகத்தை மூடவும் உத்தரவிட்ட அதிகாரிகள் உணவகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபதாரமும் விதித்தனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியான புகார்களை தெரிவித்துள்ளனர். ஆய்வுகள் மேற்கொள்வதை அதிகாரிகள் புகார்கள் வந்த பிறகே மேற்கொள்வதாகவும், அதுவரை எந்தவொரு உணவகத்தையும் கண்டுகொள்ளவதில்லை என்றும் கூறுகிறார்கள்

    சாலையோர உணவகங்களில் அடிக்கடி சென்று ஆய்வு நடத்துவதை காட்டிலும் மருத்துவமனை, மக்கள் அதிகம் செல்லும் ஓட்டல்களில் அதிரடியாக ஆய்வு நடத்துவதோடு, சமையல் அறை, தயார் செய்யப்படும் உணவு வகைகள் உள்ளிட்டவற்றையும் ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    Next Story
    ×