என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆறு-கால்வாய்கள் அழிகிறது: விழித்துக்கொள்ளாவிட்டால் விபரீதம் நேரிடும்- மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை
    X

    ஆறு-கால்வாய்கள் அழிகிறது: விழித்துக்கொள்ளாவிட்டால் விபரீதம் நேரிடும்- மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை

    • அடையாறு, கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எங்குமே கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    • இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் ஜி.மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, தமிழ்நாட்டின் தலைநகரில் பாய்ந்தோடும் முக்கிய ஆறுகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் பல்வேறு இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இதில், அடையாறு, கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எங்குமே கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இங்குள்ள நீர் எந்த வகை உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நம் கண் முன்னே ஆறுகளும், கால்வாயும் அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.

    இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும். நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாசடையாமல் தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும். அதேசமயம், பொதுமக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×