search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மாமல்லபுரம் புராதன சின்னங்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிடுகிறார்கள்- சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
    X

    மாமல்லபுரம் புராதன சின்னங்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிடுகிறார்கள்- சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு

    • மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.
    • தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாமல்லபுரம்:

    ஜி20 கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி வருகிற 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (பிப்ரவரி 1-ந் தேதி), 2-ந் தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

    அவர்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பா டுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது வெளி நாட்டினரை வரவேற்க எந்தந்த இடத்தில் கலைநிகழ்ச்சி குழுவினர் இருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து ஆேலாசனை வழங்கினார். அப்போது சென்னை வட்ட தொல்லி யல்துறை கண் காணிப்பாளர் காளிமுத்து, கோட்டாட்சியர் சஜ்ஜீவனா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×