என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை- 2 பேர் கைது
- கடந்த மாதம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 கேரட் வைரங்களை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றனர்.
- கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை:
பெரம்பூர், அகரம் சந்திப்பில் 2 மாடி கட்டிடத்தில் முதல் தளத்தில் ஜெ.எல் என்ற நகைக்கடை உள்ளது. 2-வது தளத்தில் நகைக்கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் வாகனங்களை நிறுத்தும் இடம் உள்ளது. நகைக்கடையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
கடந்த மாதம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 கேரட் வைரங்களை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை அடித்த வழக்கில், பெங்களூருவில் வைத்து 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Next Story






