search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு தேவையானதை மோடியே செய்துவிட்டார்! - பிரகாஷ்ராஜ்
    X

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு தேவையானதை மோடியே செய்துவிட்டார்! - பிரகாஷ்ராஜ்

    • அரசியலில் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளுங்கட்சி தோற்று போகும்.
    • தமிழ்நாட்டில் தான் அனுப்பியாச்சே. வாலும் ஆடாது. மேலேயும் மக்கள் அனுப்பியாச்சு.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உரிமை போராளியின் பெருமைமிகு கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    * நிறைய ஷூட்டிங் பார்த்திருப்பீர்கள். கன்னியாகுமரி ஷூட்டிங் பற்றி?

    நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். மக்கள் வருவார்கள். இவரே ஆடியன்ஸை கூட்டி போகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஆடியன்ஸ்.

    * ஜூன் 4-ந்தேதி பிரகாஷ் ராஜ், நாட்டு மக்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

    தமிழ்நாட்டில் தான் அனுப்பியாச்சே. வாலும் ஆடாது. மேலேயும் மக்கள் அனுப்பியாச்சு. அனுப்புன மாதிரி தான் தெரிகிறது.

    அரசியலில் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளுங்கட்சி தோற்று போகும். தோற்றுப்போவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் செய்து விட்டார்.

    * காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் காந்தியை பற்றி உலகத்திற்கு தெரியும் என்று சொல்லியிருப்பது?

    ஆமாம். அவர் வந்த பிறகு தானே கன்னியாகுமரி இருப்பது எங்களுக்கு தெரியும். விவேகானந்தரை இப்போ தான் தெரியும் என்று கூறினார்.

    Next Story
    ×