search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    arjun sambath - cricket
    X

    சென்னையில் வங்கதேச வீரர்கள் விளையாடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - அர்ஜுன் சம்பத் கைது

    • இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    • வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா இந்தி அமைப்பினர் கோஷம்

    இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×