என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
மாட்டுக்கறி சாப்பிடுபவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் மேல்சாதியா? - சீமான்
- லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டிய உருட்ட இருக்கே இந்தியா முழுமைக்கும் பெரிய உருட்டு.
- மாட்டுமூத்திரம் குடிக்கும் நீ மாட்டு கொழுப்பு சாப்பிட மாட்டாயா? இதுதான் அதிகப்படியான கொழுப்பு.
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்து குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* திருப்பதி லட்டு பிரச்சனையில் யாரிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளோம், யார் அதை கலந்து என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துவிட்டு வேறொரு நபரிடம் ஒப்பந்தம் கொடுத்துவிட்டால் பிரச்சனை முடிந்தது.
* லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டிய உருட்ட இருக்கே இந்தியா முழுமைக்கும் பெரிய உருட்டு
* நாட்டிலிருந்து வரும் பால் நெய் சாப்பிடும் நீ மாட்டிலிருந்து வரும் கொழுப்பு சாப்பிட்டால் செத்துவிடுவாயா?
* இவர்கள் ஒரு கோட்பாடு வைத்துள்ளார்கள். மாட்டுக்கறி சாப்பிடும் நான் கீழ்சாதி, மாட்டு பால் குடிக்கிறவன் இடைநிலை சாதி , மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் மேல்சாதி
* உலகத்திலேயே இந்தியாவில் தான் பாலும் நெய்யும் கொட்டப்படுகிறது, மாட்டு மூத்திரம் குடிக்கபடுகிறது.
* மாட்டுமூத்திரம் குடிக்கும் நீ மாட்டு கொழுப்பு சாப்பிட மாட்டாயா? இதுதான் அதிகப்படியான கொழுப்பு
* பெருமாளை நீங்கள் மதிக்கிறீர்களா இல்லை கேவலப்படுத்துகிறீர்களா? சாதாரண லட்டுவுக்கு எல்லாம் பெருமாள் மாசுபடுவாரா? புனிதம் கேட்டு போகுபவரா?
* சாதி, மதம், சாதியை வைத்து அரசியல் செய்கிறபவன் மக்களை பற்றி சிந்திக்கவே மாட்டான். மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனுக்கு சாதி, மதம், சாதியை பற்றி சிந்திக்க நேரமே இருக்காது
* சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தான் திருப்பதி லைட்டில் கொழுப்பு கலந்துவிட்டார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்ட, கிறிஸ்தவர் ஜெகன்மோகன் ஆட்சியில் தான் கொழுப்பு கலந்துவிட்டார்கள் என்று அவர்களும் குற்றம் சாட்டுகின்றனர் என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்