search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்திற்கு சீமான் ஆதரவு
    X

    தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்திற்கு சீமான் ஆதரவு

    • 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.

    சென்னை:

    சென்னையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    சொந்த ஊரில் பணி, கேங்மேன்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் கேங்மேன்கள் நடத்தும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:

    * போராட்டம் தான் ஒருவனின் இருத்தலை உறுதி செய்யும்.

    * ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.

    * எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    * போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் போராட்டம்.

    * கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள். ஆனால் மீனவர் ஒருவர் உயிரிழப்பது குறித்து எந்த அமைச்சரும் பேசக்கூட இல்லை.

    * குறையை தவிர எதையும் செய்ய முடியாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    * முதலில் கரண்டை கொடுங்கள், அதன் பின்னர் இலவச மின்சாரத்தை அளிக்கலாம் என்று கூறினார்.

    Next Story
    ×