search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    89-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் தூவி மரியாதை
    X

    89-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் தூவி மரியாதை

    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 89-வது பிறந்தநாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன்,

    விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வட்ட செயலாளர் பூக்கடை பழனிசாமி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஸ்டெர்லிங் சுரேஷ், ஆர்.கே.ஆனந்த், அனல் அய்யப்பன், மணிகண்டன், எஸ்.கோபி, டி.கோபி, ஆர்.கே.சுந்தர், பாண்டி, ராஜேஷ் குமார், ஓட்டல் முருகன், மணி, மணிமாறன், கார்த்திக், திருப்பதி, தளபதி பேரவை தலை வர் அருள்காந்த், மகளிர் அணி செயலாளர் ஷகீலா,

    அ.தி.மு.க. இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், சிம்லா முத்து சோழன்,

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா, அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாவட்ட தலைவர் சிவராஜசேகர், கொட்டிவாக்கம் முருகன், தி.நகர் ஸ்ரீராம், ஜி.கே.தாஸ், கவுன்சிலர்கள் சுகன்யா செல்வம், அமிர்தவர்ஷினி மற்றும் ஆர்.எஸ்.முத்து, திருவான்மியூர் மனோகரன்,

    பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் காளிதாஸ், ரங்கநாயகலு,

    பா.ம.க. மாநில பொருளாளர் திலக பாமா, மாவட்ட செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் துரை கோவிந்தராஜ், ராம் கிஷோர்,

    சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் கண்ணன், மாநில துணை செயலாளர் விநாயகமூர்த்தி, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், வடசென்னை மாவட்ட நாடார் பேரவை தலைவர் சீனிவாசன், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், நாடார் பேரவை வடசென்னை மாவட்ட துணை செயலாளர்கள் தாஸ், சதீஷ், ராயபுரம் பகுதி அவை தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் பாக்யராஜ், 19-வது வட்ட துணை தலைவர் ஜெகா, 38-வது வட்ட செயலாளர் சண்முகசுந்தரம், நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சாமுவேல், பொருளாளர் சுடலைமணி, வில்லிவாக்கம் பகுதி செயலாளர் பாலமுருகன்,

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன் சிங்க பெருமாள் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    Next Story
    ×