search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எழும்பூர் - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எழும்பூர் - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்

    • பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி காலை புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மதியம் எழும்பூர் வந்தடையும்.
    • சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி மாலை புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் இரவு பெங்களூரு சென்றடையும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06209), அதேநாள் மதியம் 2.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06210), அதேநாள் இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×