search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குவைத்தில் இருந்து புறப்பட்ட சென்னை விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு
    X

    குவைத்தில் இருந்து புறப்பட்ட சென்னை விமானத்தில் 'திடீர்' எந்திரக்கோளாறு

    • சிறிது நேரத்தில் மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் குவைத்தில் தரை இறக்கப்பட்டது.
    • குவைத்தில் இருந்து சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.

    ஆலந்தூர்:

    குவைத்தில் இருந்து பயணிகள் விமானம், தினமும் இரவு 11:05 மணிக்கு புறப்பட்டு, காலை 6:55 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.

    இந்த நிலையில் நேற்று இரவு குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் விமானம் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது சரி செய்யப்பட்டு தாமதமாக, நள்ளிரவு 11:51 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் குவைத்தில் தரை இறக்கப்பட்டது.

    இதனால் குவைத்தில் இருந்து சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். குவைத் விமானம் தாமதமாக வரும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் எப்போது வரும் என்ற முறையான தகவல் எதுவும், விமான நிலையத்தில் அறிவிக்கவில்லை என்று பயணிகளை வரவேற்க வந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

    Next Story
    ×