search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம்பெறாத மத்திய பட்ஜெட்!
    X

    'தமிழ்நாடு' என்ற வார்த்தையே இடம்பெறாத மத்திய பட்ஜெட்!

    • பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக ரெயில் விபத்துகள் நடந்தபோதும் மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக இன்று மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து உள்ளார்.

    இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு என்ற பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் பீகாரை தவிர்த்து வேறு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இதனிடையே, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக அசாம், இமாச்சல பிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கிய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படாதது கண்டித்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

    இதனிடையே, சமீப காலமாக ரெயில் விபத்துகள் நடந்தபோதும் மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    முன்னதாக, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×