search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்த 100 வயது மூதாட்டி மாடு முட்டி மரணம்
    X

    வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்த 100 வயது மூதாட்டி மாடு முட்டி மரணம்

    • தள்ளாத வயதிலும் மூதாட்டி எல்லம்மாள் வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.
    • வேகமாக வந்த மாடு ஒன்று கோலம் போட்டுக்கொண்டு இருந்த எல்லம்மாளை முட்டி தள்ளியது.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வட மாவந்தல், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 100).

    தள்ளாத வயதிலும் மூதாட்டி எல்லம்மாள் வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் எல்லம்மாள் வீட்டு முன்பு தெருவில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்பகுதியில் பொதுமக்கள் தங்களது மாடுகளை அலங்காரம் செய்து தெருவில் மாடுகளை விரட்டி வந்தனர்.

    அப்போது வேகமாக வந்த மாடு ஒன்று கோலம் போட்டுக்கொண்டு இருந்த எல்லம்மாளை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மூதாட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு முட்டி 100 வயது மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×