என் மலர்
திருவண்ணாமலை
- தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
- திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள்.
விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.
விழாவில் கவுதம புத்தர், அம்பேத்கர், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் திருமாவளவன் கூறியதாவது:-
* திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுத்து விடக்கூடாது.
* தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக, முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்த நினைக்கும். தப்பித்தவறி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்துவிடும்.
* தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
* விசிகவிற்கு எத்தனை சீட்டு கிடைக்கும். 6 சீட்டு 7, 8 ஆகுமா என்று கேட்கிறார்கள். 6 சீட்டு 10 சீட்டு ஆனாலும் 20 சீட்டு ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்க போவதில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் வலுவான ஒரு சக்தி என்பதை வரும் தேர்தலிலும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
- பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.
- கோவிலில் இருந்த ரசிகர்கள் ஸ்ரீகாந்த் உடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் கோவிலில் இருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர்.
- வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி தமிழ் பிரியா. தம்பதியின் மகள் பூஜா (வயது 21). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 முடித்தார்.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து நர்சிங் படித்தார். இதற்காக கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
அதே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சரண்ராஜ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரண்ராஜ் பெயிண்டர் வேலை மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். தன்னைவிட 2 வயது குறைவான வாலிபராக இருந்தாலும் சரண்ராஜ் மீது பூஜாவுக்கு காதல் மலர்ந்தது.
அடிக்கடி தனிமையில் பேசி தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது. தன்னுடைய மகள் படிப்பை கூட பார்க்காமல் பூஜாவை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்துச் சென்று விட்டனர். காதலனிடம் இருந்து தன்னை பிரித்து விட்டதால் பூஜா மனமுடைந்து காணப்பட்டார். எப்படியாவது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர். மகள் காணாமல் போனதாக தமிழ் பிரியா கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜாவை தேடி வந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதலனை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இனி தங்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்படாது என்ற நினைப்பில் இருவரும் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ் முகாமுக்கு வந்தனர்.
இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பூஜா காதலனுடன் பாதுகாப்பு கேட்டு ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணிக்கு வந்தனர்.
அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு 10 மீட்டருக்கு முன்பாக உள்ள ஒரு கோவில் அருகே மடக்கினர்.
காரில் இருந்து காதல் ஜோடி இருவரையும் வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.
சத்தம் கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வெளியே வந்தனர். அவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். பூஜாவின் உறவினர்கள் சரண்ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் பூஜாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அடித்தனர். அவருடைய தாய் தமிழ் பிரியா பூஜாவின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து வீசினார்.
போலீசார் கண்முன்னே சரண் ராஜை அடித்து தள்ளிவிட்டு பூஜாவை காரில் அழைத்து சென்றனர். காதல் மனைவியை மீட்க முடியாமல் சரண்ராஜ் அழுது துடித்தார். சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் சில நிமிடங்களில் அரங்கேறி விட்டது.
பூஜாவை கஸ்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
காதல் கணவனிடம் இருந்து பிரித்ததால் பூஜா மனம் உடைந்தார். வாழ்வில் விரக்தி அடைந்த அவர் உடல் முழுவதும் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்தார். அவருடைய குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 70 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பூஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு பூஜாவின் உடல் கும்மிடிப்பூண்டியில் உள்ள அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து களம்பூர் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அனைத்து மகளிர் போலீசார் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். நெஞ்சை பதற வைத்த இந்த காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்தது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம் அவர்கள் வரவில்லை நாங்கள் என்ன செய்வது என அனைத்து மகளிர் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவில்லை என ஆரணி டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் காதல் ஜோடி தாக்கப்படுவதை தடுத்து இருந்தால் இளம்பெண் உயிரிழப்பு நடந்திருக்காது இது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் அணிந்து இருந்த தாலியை கழட்டி வீசிய காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிக்கப்பட்ட காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த சரண்ராஜ் விரக்தியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
- சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் 3 சென்ட் இடத்திற்காக விருதம்பாள் என்கிற மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த எல்லப்பன் என்பவர் மற்றும் தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 11.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12.57 மணிக்கு நிறைவடைகிறது. நாளை இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வேங்கிக்கால்:
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் ஐயப்பன். பிரபல ரவுடி. இவர் நேற்று திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் கொலை சம்பந்தமாக சுமார் புதுச்சேரி, விழுப்புரத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொலை சம்பவத்திற்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார், புதுச்சேரியை சேர்ந்த ரவுடி ஏன் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விவரங்கள் விசாரணைக்கு பின்பு தெரிய வரும்.
இந்த கொலை சம்பவம் நடந்த ஏரி பகுதியில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடைபெறுவதாகவும், இந்த சூதாட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சசிகலா சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு சாமி மற்றும் அம்பாள் சன்னதியில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தி.மு.க. அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்பது ஒட்டுமொத்த மக்களும் அறிந்த ஒன்று. இதனை யாராலும் மறுக்க முடியாது. மீதம் உள்ள ஆட்சி காலத்தை நடத்துவதற்காக தி.மு.க. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கூட்டணி கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளது. மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த இதனை பிரசார யுக்தியாக தி.மு.க.செய்து வருகிறது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது தி.மு.க.வினர் மின்சாரத்தை வெளிமாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்குகின்றனர். இதில் ஏதோ தவறு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் மட்டும் தான் உள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின் 43 மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் 2 ஆயிரத்து 500 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்களை மட்டும் நியமித்தால் போதாது. அங்கு செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பதையே தமிழக முதலமைச்சர் நோக்கமாக கொண்டுள்ளதால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்போம், கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
- தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வேங்கிக்கால்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியை திணிக்க முயல்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் திட்டத்தில் ஒன்றானது. ஒரே நாடு ஒரே மொழி என்பதை அடையும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.
தனி நபர்கள் இந்தியை கற்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தான் எதிர்க்கிறோம். கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதியை தருவோம் என்பது ஏற்புடையதல்ல.
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை கண்டிக்கிறது. மார்ச் 5-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை அமைந்தால் தமிழ்நாடு 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கிறது.
நடிகர் விஜய் தேர்தலை சந்தித்தால் தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, அங்கீகரிக்கிறார்களா என்பது தெரியவரும். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில் அ.தி.மு.க.வையோ, தி.மு.க.வையோ பலவீனப்படுத்த முடியும் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். சினிமா புகழை மட்டும் வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்டி விட முடியும் என்று சொல்லிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தமிழக இளைய தலைமுறையினரை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான் என சிவகுமார் தெரிவித்தார்.
- பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் நடிகர் சிவகுமார் பேசினார்.
திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் வரைந்த பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகுமார், "இன்றைக்கும் ஒரு சாதிய கட்டமைப்பு உள்ளது. இவன் மேல்சாதிக்காரன், இவன் கீழ் சாதிக்காரன்.. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என 4 வகைகளாக பிரித்து.. இதில் சூத்திரன் கடைசி ஆளு.
இப்படி கீழ் சாதிக்காரன் என மக்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கும்போது.. ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வருவதற்கு போராடிய ஒரே போராளி பெரியார். நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான்" என்று தெரிவித்தார்.
- டேங்கர் லாரியின் இருந்த கிளீனர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றி கொண்டு இன்று அதிகாலை டேங்கர் லாரி திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
டேங்கர் லாரியை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் ஓட்டிச் சென்றார்.
பாச்சல் அருகே டேங்கர் லாரி சென்ற போது எதிரே வந்த மினி சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் 2 வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. மளமளவென தீ பரவியதால் 2 வாகனங்களும் தீயில் கருகின. வாகனங்களின் டயர்களும் வெடித்து சிதறின.
இந்த கோர விபத்தில் மினி சரக்கு லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிரதாப் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டேங்கர் லாரியின் இருந்த கிளீனர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டேங்கர் லாரியை ஓட்டி வந்த ரகு தீயில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், சக்திவேல் ஆகியோர் தீயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பிரதாபின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீயில் எரிந்து கொண்டிருந்த 2 வாகனங்களையும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி சரக்கு லாரி டிரைவர் தீயில் இருந்து தப்பிக்க தனது வாகனத்தின் வலது புற கதவை திறக்க முயன்றபோது கதவு திறக்க முடியாமல் போனதால் வாகனத்திலேயே உடல் கருகி பலியானது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தால் திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வேலூர் மார்க்கமாக செல்லும் ரெயில்களில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் ஏறினர்.
- கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியையொட்டி நேற்று முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரம், வேலூர் மார்க்கமாக செல்லும் ரெயில்களில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் ஏறினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகள் பெண்கள் ரெயிலில் ஏற முடியாமல் அவதி அடைந்தனர்.
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் திருவண்ணாமலை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதிலும் கூட்டம் அலைமோதியது.
ஆட்டோக்களால் திருவண்ணாமலை நகரம் போக்குவரத்து நெரிசலால் திணறியது. பக்தர்கள் நடந்து செல்ல கூட வழியில்லாத அளவுக்கு அனைத்து சாலைகளையும் ஆட்டோ ஆக்கிரமித்து இருந்ததால் கிரிவல பக்தர்களும், நகர பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெளியூர்களில் இருந்து வரும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் நேற்று திருவண்ணாமலை நகரம் வரை அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.
திருவண்ணாமலை நகருக்கு வரும் பக்தர்களின் கார்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தும் மையங்களில் நிறுத்தி, மாடவீதிகளில் ஆட்டோக்களை அனுமதிக்காமல் இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.
- தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார்.
- கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். இவர் துபாயில் ஓட்டல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் கழுத்து மற்றும் கை நிறைய சுமார் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் அணிந்தபடி வந்தார். கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.