search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீட் தேர்வு முறைகேடு: 21-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நீட் தேர்வு முறைகேடு: 21-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்

    • அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
    • போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    நீட் தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொடர் மௌனத்தை கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×