search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழா 15-ந்தேதிக்கு மாற்றம்- துரைமுருகன்
    X

    கோவையில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழா 15-ந்தேதிக்கு மாற்றம்- துரைமுருகன்

    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
    • அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் (ஜூன் 8-ந்தேதி) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த சீர்மிகு விழா தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 14-ந்தேதி பதிலாக ஜூன் 15-ந் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்" நடைபெறுகிறது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    அனைத்துக் கழக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×